×

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிக்கை

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: எஸ்.எஸ்.எல்.சி தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி, எச்.எஸ்.சி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சென்னை கிண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில், விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்….

The post வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Amrtha Jothi ,SC ,
× RELATED பாரதியார் பல்கலையில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு புதிய பாடம் துவக்கம்